உள்ளே வந்ததும் குழப்பத்தை ஆரம்பித்த கம்பீர்…. டி 20 அணிக்கு புதிய கேப்டன் யார்?

vinoth

வியாழன், 18 ஜூலை 2024 (07:52 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை நியமிக்க வேண்டும் எனப் புதுப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தேர்வுக்குழுவினர் அனைவரும் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக கம்பீருக்கும், அஜித் அகார்கருக்கும் இடையே விவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவாதம் முடிவை எட்டாததால்தன இன்னும் இலங்கை தொடருக்கான அணி அறிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கம்பீர் அணிக்குள் வந்த முதல் தொடரிலேயே கேப்டனை நியமிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்