இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நீங்கள் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர் யார் என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு “சுனில் நரேன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகிய இருவர்தான்” எனப் பதிலளித்துள்ளார். இருவருமே ஐபிஎல் தொடரில் தோனிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.