தோனியின் நெருங்கிய நண்பரின் தந்தை மரணம் !

புதன், 12 மே 2021 (19:23 IST)
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரொனாவால் உயிரிழந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங். இவர் எதிரணியினருக்கு தனது பந்துவீச்சால் டஃப் கொடுப்பவர்.  இவரது பந்துவீச்சால் பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.குறிப்பாக 2007 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தார்.

இந்நிலையில்,  ஆர்.பி.சிங்கின் தனது  தந்தை கொரொனாவால் உயிரிழந்தது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், எனது தந்தை கொரொனாவால் பலியானார். அவரது மரணம் எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பிரார்த்தனையில் என் தந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.சிங்கிற்கும் இவரது குடும்பத்திற்கும் கிரிக்கெட்வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

It is with deepest grief and sadness we inform the passing away of my father, Mr Shiv Prasad Singh. He left for his heavenly abode on 12th May after suffering from Covid. We request you to keep my beloved father in your thoughts and prayers. RIP Papa. ॐ नमः शिवाय

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்