அறிமுக டெஸ்ட் போட்டி: தவான் சதம் - இந்தியாவை சமாளிக்குமா ஆப்கான்?

வியாழன், 14 ஜூன் 2018 (12:06 IST)
ஆக்பானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்த்தை வழங்கியுள்ளது ஐசிசி. அதன்படி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டுள்ளது. 
 
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை துவங்கியது. 
 
இந்திய அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே உள்ளார். ஆப்கானிஸ்தான் அணி அஸ்கார் ஸ்டானிக்ஸாய் தலைமையில் களமிறங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
 
முரளி விஜய் மற்றும் தவான் துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். 27 ஓவர்கள் வீசப்பட்டுள்ல நிலையில், இந்திய அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 158 ரன்கல் குவித்துள்ளது. 
 
முரளி விஜய் அரை சத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார். தவான் சதமடித்துள்ளார். இந்திய அணி சிறப்பான துவக்கத்தையே கொடுத்துள்ளது. இந்திய அணியை ஆப்கான் சமாளிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்