ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளர் நியமனம்!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:58 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக  விவி.எஸ். லட்சுமணம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரொனா தொற்று  உறுதியாகியுள்ள நிலையில், அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

எனவே இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ். லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியப் கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியில் திறமையாக விளையாடியதுபோல் இப்போட்டியில் இந்தியா ஜொலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்