பாகிஸ்தான் கிட்ட கூட இந்தியா நெருங்க முடியாது… அப்துல் ரசாக் சீண்டல்!

செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:02 IST)
இந்திய அணியில் இருக்கும்  வீரர்களை விட பாகிஸ்தான் அணியின் வீர்ரகள் திறமையானவர்கள் என அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் காரணமாக இரு நாட்டு தொடர்கள் நடப்பதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே கலந்துகொள்கின்றன. இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் இந்த போட்டி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இந்திய கிரிக்கெட் அணியை சீண்டும் விதமாக பேசியுள்ளார். அதில் ‘பாகிஸ்தானுடன் இந்தியா போட்டி போடமுடியும் என நான் நினைக்கவில்லை. இரு அணிகளும் மோதினால்தான் வீரர்கள் எந்த அளவு அழுத்தத்தை எதிர்கொண்டு வெளிவருகிறார்கள் என்பது தெரியவரும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணியில் திறமையான வீரர்கள் இல்லை என்பதை ரசிகர்கள் அறிவார்கள்.’ எனறு இந்திய அணியை மட்டம் தட்டி பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்