உப்பு போட்டு சாப்பிடறவன் உள்ள இருக்கமாட்டானு சொன்னவரு... கொந்தளித்த கமல்!

சனி, 10 அக்டோபர் 2020 (16:32 IST)
சுவாரஸ்யத்தை தூண்டும் பிக்பாஸ் ப்ரோமோ

மந்தம் தட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க கமல் வந்துவிட்டார். வாரத்தின் இறுதி நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டுமில்ல அதன் ப்ரோமோவிற்கும் மக்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்தவகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் ப்ரோமோ படுமொக்கையாக இருந்தது.

தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கமல், " உப்பு போட்டு சாப்பிடறவன் உள்ள இருக்கமாட்டானு சொன்னவரு உள்ளயே இருக்காரு ஒருத்தர். தேர்ந்தெடுக்கப்படலாமே தலைவர் ஆகிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறவர் இன்னொருத்தர்   என கூறி ரேகா மற்றும் சுரேஷ் இருவரையும் மறைமுகமாக திட்டியுள்ளார்.  கமலின் இந்த பேச்சில் நிறைய அரசியல் கலந்திருப்பதாக ஆளாளுக்கு கமெண்ட் அடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்