சர்க்கார் 3 - வர்மா அறிவிப்பு

திங்கள், 30 நவம்பர் 2015 (15:01 IST)
இந்தியில் சிங்கமாக திகழ்ந்துவந்த ராம் கோபால் வர்மா, வாரத்துக்கு ஒரு படம் இயக்கி சித்தெறும்பாக சிறுத்துப் போனார்.


 

 
தெலுங்கில் அவர் இயக்கும் படங்களை ஜனங்கள் பார்க்கிறார்களா என்ற கவலை அவருக்கும் இல்லை, அவர் படங்களை பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் ஜனங்களுக்கும் இல்லை.
 
தற்போது கில்லிங் வீரப்பன் படத்தை எடுத்து முடித்துள்ளார். அப்படம் பல்வேறு பிரச்சனைகளுடன் பஞ்சாயத்துக்காக காத்திருக்கிறது.
 
இந்நிலையில், இனி எப்போது இந்தியில் படம் இயக்குவீர்கள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில், வர்மா ரசிகர்களை குஷிப்படுத்தக் கூடியது.
 
வர்மாவின் படங்களில் தவிர்க்க முடியாதவை சர்க்காரும், சர்க்கார் ராஜும். இந்தப் படத்தின் மூன்றாவது பாகம்தான் என்னுடைய இந்தி ரீஎன்ட்ரியின் முதல் படமாக இருக்கும், அமிதாப் பச்சனே அதில் ஹீரோ என தெரிவித்துள்ளார்.
 
வர்மா பழைய பார்முக்கு வருவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்