கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உத்தரகண்ட் முதல்வர்

திங்கள், 28 டிசம்பர் 2020 (14:52 IST)
உத்தரப்பிரதேச முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு கொரோனா தொற்று டிசம்பர் 18ம் தேதி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
 
முதல்வர் உடல் நிலை குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்றும், லேசான காய்ச்சல் இருந்ததால் அவரை முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேரச் சொல்லி அறிவுரை கூறியதாகவும் அந்த மருத்துவமனையின் தொடர்பு அலுவலர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியதாக இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்