அவர்கள் நாடு திரும்பினால், அவர்களாலும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களாலும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் கவலையடைந்துள்ளனர். சிரியா மற்றும் இராக்கில் டஜன் கணக்கான ஆஸ்திரேலியப் பிரஜைகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக சண்டையிட்டு வருகின்றனர் என்று நம்பப்படுகிறது.
படுகொலைகளுக்கு அப்பாற்பட்டு, பாலியல் அடிமைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கட்டளைகளை பிறப்பித்துள்ளது என்று ஏபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பெண்களை அடிப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது குறித்துக்கூட அவ்வமைப்பு கட்டளைகளை வெளியிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.