தமிழ்நாட்டில் ஓலா மின்சார வாகன தொழிற்சாலை: முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

புதன், 10 மார்ச் 2021 (15:37 IST)
இந்தியாவின் முன்னணி வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா, உலகின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்தில் இயங்கும் இரண்டு கோடி ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஓலா நிறுவனத்துக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தான நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்று, பிப்ரவரி மாதம் மாதம் முதல் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக உருவெடுக்கவுள்ள இதன் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, அடுத்த சில மாதங்களிலேயே வாகன உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மற்றும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சிறப்பம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்