சாட் நாட்டில் ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த அதிபர், தன் விஜயத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இந்த மோதல்களில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் பாமகோவில் இருந்த ராடிஸன் ப்ளூ ஹோட்டலை முற்றுகையிட்டதையடுத்து, மாலியின் சிறப்புப் படையினர், ஃப்ரான்ஸின் சிறப்புப் படையினர், பணியில் இல்லாத அமெரிக்கப் படையினர் ஆகியோர் தாக்குதலைத் துவங்கினர். இதையடுத்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 130க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மீட்கப்பட்டனர்.