வங்கதேசம்: ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் முகாமில் முதல் கொரோனா உயிரிழப்பு

வியாழன், 4 ஜூன் 2020 (14:04 IST)
தென் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள ஒரு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் முகாமில் 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
 
மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள காக்ஸ் பசார் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான குடுபலோங்கில் வாழ்ந்து வந்த அவர், மருத்துவ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த தனிமைப்படுத்தும் மையத்தில் இறந்தார்.
 
உலகிலேயே அதிக அளவிலாக அகதிகள் வாழும் அந்த முகாமில் இதுவரை 29 ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு வெறும் 339 பரிசோதனைகள் மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்