தமிழகத்தில், மத வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லூரிகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதால் எவ்வித மாற்றமும் இருக்காது என்று பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்போது நீதிமன்றத்தின் உத்தரவு படி மேலும் 1000 மதுக்கடைகள் மூடுவதற்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் மத வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லூரி என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதால் எவ்வித மாற்றமும் இருக்காது. மக்களுக்கு இடையூறாக இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும், என்று கூறினார்.