கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

வெள்ளி, 26 அக்டோபர் 2018 (08:29 IST)
கிரீஸ் நாட்டி 6.8 அளவு ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.8 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால்  பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.
 
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்