மாடல் அழகியை கடத்தி, செக்ஸ் அடிமையாக விற்ற நபர்!!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (14:43 IST)
இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவரை ஆன்லைனில் செக்ஸ் அடிமையாக விற்க கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
லண்டனில் உள்ள கூல்ஸ்டன் பகுதியை சேர்ந்தவர் க்ளோ அய்லிங். இவர் ஒரு மாடல் அழகி. கடந்த மாதம் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்ற போது அவர் கடத்தப்பட்டார்.
 
மயக்க மருந்து அளித்து 6 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த, க்ளோவை ஆன்லைனில் செக்ஸ் அடிமையாக ரூ.1 கோடியே 91 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளார். 
 
பின்னர் நான் ஒரு குழந்தைக்கு தாய் என்பது தெரிந்த பிறகு என்னை விடுவித்துவிட்டார் என க்ளோ தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்