இத்தாலியில் கொரோனா பலி 109 ஆக உயர்வு..

Arun Prasath

வியாழன், 5 மார்ச் 2020 (15:04 IST)
இத்தாலி கொரோனா வைஸால் பலியானோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

இதனிடையே ஐரோப்பா நாடான இத்தாலி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் 3,089 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15 ஆம் தேதி வரை மூட அந்நாட்டுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்