இந்த புதிய கொரோனாவின் தாக்கம் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ் என பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதிய கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் வேகமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருவதாகவும், மருத்துவர்கள் போதாமையால் பலருக்கு மருத்துவம் பார்ப்பதில் முன்னுரிமை அளிப்பதில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.