கோடிங் போடும் புதிய வகை ஏஐ டூல்.. ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் தொழில்நுட்பம்..!

Siva

புதன், 13 மார்ச் 2024 (14:57 IST)
செயற்கை நுண்ணறிவு என்றால் ஏஐ தொழில்நுட்பம் ஒவ்வொரு துறைகளிலும் வளர்ந்து வரும் தற்போது கோடிங் வரையும் ஏஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது சாப்ட்வேர் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி ஐடி ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது திரைப்படத் தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக டெவின் என்ற ஏஐ டூல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த ஏஐ டூல் மூலம் ஏராளமான கோடிங் வடிவமைக்க முடியும் என்றும் ஒரு சில நொடிகளில் எந்த கோடிங் வேண்டுமானாலும் அமைத்துக் கொடுக்கும் திறன் கொண்டது இந்த டெவின் என்றும் கூறப்படுகிறது 
 
கோட் எடிட்டர், பிரவுசர் உள்பட பல விஷயங்களை இந்த டூல் தெரிந்து வைத்திருப்பதை அடுத்து நமக்கு ஆச்சரியத்தக்க முடிவுகளை கொடுக்கும் என்றும் நிச்சயம் இது சாப்ட்வேர் மற்றும் கேமிங் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது 
 
இதன் காரணமாக ஏராளமான ஐடி ஊழியர்கள் வேலை எனக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்