பொட்டத்தில் உயிருடன் பார்சலில் வந்த கொரோனா வைரஸ்!

திங்கள், 19 அக்டோபர் 2020 (10:32 IST)
வாழும் நிலையில் கொரோனா வைரஸ் உறைய வைக்கப்பட்டிருந்த உணவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் கடந்த கடந்த ஜூலை மாதம், ஒரு கண்டெய்னரின் உள்சுவரிலும், ‘பேக்கேஜிங்’கிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது அப்போது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது இதேபோல உறைய வைக்கப்பட்ட உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் வாழும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
உலக அளவிலேயே முதல் முறையாக உறைய வைக்கப்பட்டிருந்த உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் வாழும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்