தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியாமல் இருந்த இளைஞர்!

Sinoj

செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:22 IST)
பிரேசில்  நாட்டில் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார் ஒரு நபர்.

பிரேசில் நாட்டில் ஒரு  நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது இளைஞர்  மீது  யாரோ துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

அப்போது, தன் தலையில் யாரோ கல்லால் அடித்துவிட்டார்கள் போல என நினைத்துக்கொண்டு,  அந்த இளைஞர்  4 நாட்களாக தன் நண்பர்களுடன் கொண்டாத்தில் இருந்திருக்கிறார்.

அதன்பின்னர், திடீரென அவரது கை செயல்படாமல் போனதால் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  அந்த இளைஞரின் தலைக்குள்  9 மிமீ., குண்டு  இருந்ததைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து அந்தக் குண்டை அகற்றியதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்