மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ! உருவானது புதிய கூட்டணி !

வியாழன், 5 மார்ச் 2020 (08:13 IST)
மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பரியேறும் பெருமாள் வெற்றிப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க கலைப்புணி தாணு தயாரிக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆதித்ய வர்மா படம் பெரிய அளவில் வசூலையோ விமர்சனங்களையோ பெறவில்லை என்றாலும், த்ருவ் விக்ரம்மின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்