நீ வீட்ல தான் இருக்கனும் மறந்துடாத டீ.... கணவன் மார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

திங்கள், 20 ஏப்ரல் 2020 (08:48 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா     தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார். இந்த ஊரடங்கின் போது உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது, நீங்கள் ரிட்டயர்டு ஆன பிறகு வாழும் வாழ்க்கையின் டிரெய்லர்'' என்று பதிவிட்டிருந்தார்.

சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது  கணவர் சந்திரமௌலி  தனது ட்விட்டரில் ''இந்த ஊரடங்கின் போது உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது, ரிட்டயர்டு ஆன பிறகு வாழும் வாழ்க்கையின் ஒரு டிரெய்லர்'' என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். அதற்கு கமெண்ட்ஸ் செய்த அஞ்சனா " ''நீ வீட்ல தான் இருக்கணும், வெளியில போக முடியாது மறந்துடாத டீ'' என்று பதிலளிக்க, உடனே வடிவேலுவின் எமோஜியை சந்திரமௌலி சென்ட் செய்தார். இந்த ஜோடியின் கியூட் அலம்பலை ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருகின்றனர்.

Nee veetla dhan irukkanum, velila poga mudiyadhunu marandhuta di! @moulistic

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்