அந்த படம் என்ன நிலையில் இருக்குன்னே தெரில... ஓப்பனாக சொன்ன விஷ்ணு விஷால்

vinoth

சனி, 3 பிப்ரவரி 2024 (15:03 IST)
ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் மற்றும் மியார் ஜார்ஜ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் இன்று நேற்று நாளை. தமிழில் அதிகம் வராத டைம் டிராவல் வகையில் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த படத்தின் பார்ட் 2 எடுக்க விரும்பிய தயாரிப்பாளர் சி வி குமார் இயக்குனர் ரவிக்குமாரை கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள சொன்னார். அவரின் இணை இயக்குனர் எஸ் பி கார்த்திக் அந்த படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு பூஜையும் போடப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன என்றால் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துகொண்டிருந்தார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படம் என்ன நிலையில் உள்ளது என்றே எனக்கு தெரியாது என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

அதில் “அந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்க முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் தள்ளி போய்க் கொண்டே இருந்தது. இப்போது என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை. நானும் அந்த படத்துக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்