புயலின்போது டைட்டிலை அறிவிக்கும் ‘புரட்சிப்புயல்’ நடிகர்!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (07:26 IST)
தமிழகத்தை நிவர் என்ற புயல் நெருங்கி வருகிறது என்பதும் இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக கவனித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிவர் புயல் 25ஆம் தேதி மாலை அதாவது நாளை மாலை சென்னை மற்றும் புதுவை இடையே காதல் புயல் கரையை கடக்கும் என்றும் குறிப்பாக மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் எடையை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திடீரென கடைசி நேரத்தில் புயலின் பாதையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது 
 
இந்த நிலையில் சரியாக புயல் கரையை கடக்கும் நேரத்தில் விஷால் தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளார். நாளை மாலை 5 மணிக்கு விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷாலின் முப்பதாவது படமாகவும் ஆர்யாவின் 32வது படமாகவும் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷால் ஜோடியாக மிருணாளினி ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது
 
ஏற்கனவே விஷால் நடித்து முடித்துள்ள ‘துப்பறிவாளன்’ மற்றும் ’சக்ரா’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்