ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய அப்டேட் கொடுத்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்!

செவ்வாய், 27 ஜூன் 2023 (16:53 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாப்ய் நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் போல ஒரு சாகசப் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்நிலையில் இப்போது இந்த படம் பற்றி பேசியுள்ள ராஜமௌலியின் தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார். அதில் இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் பட வரிசையில் வெளிவந்த ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் படத்தை போல இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த படம் பல பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இது ஆக்‌ஷன் சாகச பட பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்