வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ள ஹீரோ இவர்தான்!

வியாழன், 26 அக்டோபர் 2023 (07:13 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மாநாடு என்ற ஹிட் படத்தைக் கொடுத்த வெங்கட் பிரபு அடுத்து இயக்கிய கஸ்டடி திரைப்படம் ப்ளாப் ஆனது. அதையடுத்து அவர் தளபதி 68 படத்தை இயக்குவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெரியளவில் இல்லை.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு வெங்கட்பிரபு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்