சிம்புவோடு மாநாடா ? லாரன்ஸோடு புதுப்படமா ? – என்ன முடிவெடுப்பார் வெங்கட் பிரபு ?

திங்கள், 9 டிசம்பர் 2019 (16:01 IST)
நடிகர் லாரன்ஸோடு இயக்குனர் வெங்கட் பிரபு புதிதாக ஒரு படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் சிம்பு இணைவதாக இருந்த மாநாடு படம் என்ன நிலையில் உள்ளது என்று அவருக்கே தெரியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் அவர் இயக்கத்தில் உருவான பார்ட்டி ஒருவருடமாக முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் மாநாடு படம் வருமா வராதா என்று தெரியாத நிலையில் வெங்கட்பிரபு நடிகர் லாரன்ஸுடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியாகியுள்ளது. ஆனாலும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என அவரது தாயார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சிம்பு மாநாடு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டால் வெங்கட் பிரபு என்ன முடிவெடுப்பார் என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்