மீண்டும் ஹீரோவான உறியடி விஜயகுமார் – வெளியான அறிவிப்பு!

சனி, 12 டிசம்பர் 2020 (09:11 IST)
உறியடி 1மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி நடித்த விஜயகுமார் மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதையடுத்து அவர் இயக்கிய படம்  "உறியடி 2". இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது விஜயகுமார் தனது உதவியாளர் அபாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் 1990 முதல் 30 ஆண்டுகளில் நடக்கும் பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த படமாக அமையும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்