2.0 படத்திற்கு கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி - இயக்குனர் சங்கர்

சனி, 1 டிசம்பர் 2018 (10:25 IST)
2.0 திரைப்படத்திற்கு பெரும் ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு அப்படத்தின் இயக்குனர் சங்கர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். 
திரைக்கு வந்துள்ள 2.0 திரைப்படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் , படத்தில் தங்களது வாழ்க்கையில் ஒரு பகுதியை கொடுத்து பணியாற்றிய படக்குழுவினருக்கும் நன்றி என்று அப்படத்தின் இயக்குநர் சங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 
2.0 படம் உலகம் முழுவதும் 10,000-க்கும் மேற்ப்பட்டதிரையரங்குகளில்  நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பிரமாண்ட நட்சத்திரங்கள்  நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
இந்தத் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் , பிரபலங்கள் என பலர் ட்விட்டரில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் சங்கர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
அதில் அவர் கூறியதாவது,  "2.0 திரைப்படத்தை பார்த்து அதனை கொண்டாடி வரும் ரசிர்களுக்கும், எங்களின் கடுமையான உழைப்பை மதித்து ஆதரவளித்திருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. மேலும் தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கத்தை  இந்த படத்திற்காக கொடுத்து பணியாற்றிய படக்குழுவினருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்