பேரு தான் "அருவா " ஆனால், இது ஆக்ஷன் படம் இல்லை... அப்போ?

செவ்வாய், 3 மார்ச் 2020 (14:30 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கும் ‘அருவா’ ஆக்ஷன் படம் இல்லை என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் மற்றும் அதன் பிற பாகங்கள் ஆகியவை வெளியாகின. இந்த படங்கள் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.
 
ஹரியின் 16வது படமான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க இருக்கிறார். இமான் ஹரி படங்களுக்கும் இதுவரை இசையமைத்தது கிடையாது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற  ஏப்ரல் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடந்து முடியவுள்ளது.
 
இந்நிலையில் "அருவா" என டைட்டில் வைத்துள்ளதால் நிச்சயம் ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில்  பேட்டி ஒன்றில் " இது அண்ணன்- தம்பி பாசத்தை முன்வைத்து எடுக்கப்படும் படம் என்றும்  ஆக்ஷனை தவிர்த்து படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைய இருக்கும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்