14 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் மீண்டும் இணையும் சூர்யா, ஜோதிகா !

செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:32 IST)
தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், மாயாவி,சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த சூர்யா, ஜோதியா காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களின் ஆன் ஸ்கிரீன் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே கொண்டாடினர்.

பின்னர், சூர்யாவின் தயாரிப்பில்  ஜோதிகா நடித்து வெளியான 36 வயதினிலே படம்  பெரிய ஹிட் ஆனது.


பின்னர் பொன்மகள் வந்தாள், உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஜோதியா, சூர்யாவுடன் ஒரு  படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் சிலுக்குப்பட்டி படத்தை தயாரித்த ஹலிதா தமீம் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், பாம்பே டேஸ் என்ற மலையாளப் படத்தின் இயக்குநர் அஞ்சலி மேனன் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்