ரவிக்குமார் படத்தில் சூர்யா...இதை யாரும் எதிர்பார்க்கலையே?

Sinoj

வெள்ளி, 8 மார்ச் 2024 (21:49 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ரவிக்குமார். இவர், இன்று நேற்று நாளை, அயலான்  உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
 
இவர் அடுத்து சூர்யாவை வைத்து சயின்ஸ் பிக்சன் கதையை படமாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
தற்போது சூர்யா சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா படத்திலும், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும், சுதா கொங்கராவின் புறநானூறு படத்திலும் நடித்து வருகிறார்.
 
அத்துடன் இந்தியில் கர்ணா என்ற படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 3 ஆண்டுகளுக்கு முன்பே ரவிக்குமார் சூர்யாவிடம்  புதிய படத்திற்கான ஸ்கிரிப்டை கொடுத்து படிக்கச் சொன்னதாகவும், அதைப் படித்து பார்த்த சூர்யா, பிடித்துப்போய், தற்போது சென்னையில் அவருக்கு சொந்தமான இடத்தில் ரவிக்குமாருக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து இப்படத்தின் சிஜி   உள்ளிட்ட பணிகளை ஆரம்பிக்கும்படி கூறியுள்ளதாகவும், சூர்யா தன் மற்ற படங்களில் கமிட்மன்டுகளை முடித்துவிட்டு வந்து இப்படத்தில் இணைய  நேரம் சரியாக இருக்கும் என்று திட்டமிட்டுள்ளதாகவும்  கூதகவல் வெளியாகிறது.
 
இதனால் சூர்யா ரசிகர்கள் அடுத்த அப்டேட்டை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் அப்டடேட் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்