முதல் முறையாக நடிகைகளின் பெயர்களை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

வியாழன், 19 ஜூலை 2018 (11:13 IST)
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. ஆதி உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.
பல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் வாரிசுகளும் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும், முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
 
நெட்டிசன்கள் சிலர் முகநூல் பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீ ரெட்டி முன்னணி நடிகைகள், தங்களின் வாயை திறந்தால் அதிர்ச்சியில் நீங்கள்  மரணமடைந்து விடுவீர்கள் என கூறியுருந்தார். மேலும் சில நல்ல நடிகைகள் இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் நல்ல நடிகைகள்தான். அவர்கள் முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். அந்த நடிகைகளின் முதல் எழுத்து மற்றும் நடுவில் உள்ள எழுத்து மற்றும் கடைசி எழுத்துகளை மட்டும் முகநூல்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
அந்த நடிகைகள் மட்டும் வாய் திறந்தால் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களை விட அவர்களுடன் படுகையை பகிர்ந்து கொண்டவர்களின் பட்டியல் எவ்வளவு பெரியது என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் அவர் தெரிவித்திருக்கும் பெயர்கள் நயன்தாரா, திரிஷா, சமந்தா மற்றும் காஜல்தான் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதுவரை நடிகர்களின் பெயரை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி தற்போது நடிகைகளின் பெயரையும் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் இன்னும் யார் பெயரெல்லாம் வெளியாகுமோ என்று பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்