எஸ்பிபி உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை:ரசிகர்கள் நிம்மதி

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (18:15 IST)
எஸ்பிபி உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை:ரசிகர்கள் நிம்மதி
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமாக இருப்பதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது என்பது தெரிந்ததுதான் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனையின் அறிக்கையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரை சிறப்பு மருத்துவர்கள் வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது 
 
மேலும் எஸ்பிபி அவர்கள் எக்மோமற்றும் வென்டிலேட்டர் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது கேட்டு அறிந்து கொள்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை இன்று சீராக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்