எஸ்.பி.பி-க்கு பிசியோதெரபி சிகிச்சை; எஸ்பிபி மகன் தகவல்

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (17:58 IST)
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது உடல்நிலை கடந்த 4 நாட்களாக சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் அவ்வப்போது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது 
 
அதே போல் எஸ்பிபி மகன் அவர்களும் தினமும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு தந்தையின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் எஸ்பிபி சரண் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் 
 
அதில் தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ்பிபி அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விரைந்து குணமாகி வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார் 
 
தனது தந்தை குணமாக வேண்டி பிரார்த்தனை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் தனது நன்றி என்றும் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்