மாரி செல்வராஜுக்கு சிவக்குமார் அளித்த பரிசு

சனி, 6 அக்டோபர் 2018 (11:29 IST)
பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ள பரியேறும் பெருமாள் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

சாதிய கொடுமைகளுக்கு எதிரான இந்தப் படத்தைபார்த்து திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும்தயாரிப்பாளர் பா ரஞ்சித் ஆகியோரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். நடிகர்சிவகுமார் மாரி செல்வராஜை அழைத்து, 'சமூகத்துக்கு அவசியமான படம். ஒவ்வொருவரின் மனதிலும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்திவிட்டீர்கள். சில காட்சிகளில் கலங்கவைத்து விட்டீர்கள்' என்று பாராட்டி, தான் வரைந்த ஓவியப் புத்தகத்தைப் பரிசளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்