அயலான் படத்துக்காக மீண்டும் கடன் வாங்கிய சிவகார்த்திகேயன்!

vinoth

வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:06 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் படத்தின் மேல் இருந்த ஏகப்பட்ட கோடி ரூபாய் கடனை அடைக்க கடைசி கட்டத்தில் சிவகார்த்திகேயன்தான் கைகொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.

கடைசி நேரத்தில் படத்துக்காக பிரபல பைனான்சியர் ஒருவரிடம் கடன் வாங்கி அவர் பணத்தை செட்டில் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையையும் நேற்று நீதிமன்றம் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்