மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்த சிம்பு

வியாழன், 18 மார்ச் 2021 (19:28 IST)
செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பிற்கு சிம்பு, விஜய்சேதுபதி இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

 விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் சிங்கிள் ட்ராக் மார்ச் 19ஆம் தேதி 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகிய முருகா என்று தொடங்கும் பாடல் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள முருகா பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய்சேதுபதி,மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு வெயிட்டிங்கில் உள்ளனர்.

செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பிற்கு சிம்பு, விஜய்சேதுபதி இணைந்த் படம் இதுவாகும்.

வெங்கட கிருஷ்ண கோபிநாத் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விஜய் சேதுபதியின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்