ரசிகர்களை தாக்கினார்களா சிம்புவின் மெய்க்காப்பாளர்கள்- உருவானது அடுத்த சர்ச்சை!

வெள்ளி, 15 ஜனவரி 2021 (16:24 IST)
நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்காக திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்த நிலையில் அங்கு ரசிகர்களுக்கும் சிம்புவின் மெய்க்காப்பாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் நாளை வெளியாக உள்ளது. ஆனால்  ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் எல்லா பிரச்சனைகளையும் மீறி படம் நேற்று வெளியானது. கலவையான விமர்சனங்களை படம் பெற்றுள்ளது.  ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்காக சிம்பு திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவரை பார்த்து ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் சிம்புவின் மெய்க்காப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு எழுந்துள்ளது. அப்போது பவுன்ஸர்ஸ் எனப்படும் மெய்க்காப்பாளர்கள் ரசிகர்களை அடித்து விரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்