எந்த அப்டேட்டும் இல்லாத செல்வராகவன் படம்… அடுத்த வேலையைப் பார்க்கும் தனுஷ்!

புதன், 28 ஜூலை 2021 (10:38 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் மேலும் சில காலம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் கதை ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்துக்கு புதிதாக ராயன் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதைக்களத்தையும் கேங்ஸ்டர் களத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது வரை படப்பிடிப்புக்கு செல்வது சம்மந்தமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கான வேலைகள் விறுவிறுவென தொடங்கி நடந்து வருகின்றன. இதனால் அடுத்து அந்த படத்தில் தனுஷ் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்