அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கதையில் நடிக்கும் சந்தானம் – பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:18 IST)
நடிகர் சந்தானம் முதல்முறையாக அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.

சந்தானம் காமெடி நடிகரில் இருந்து கதாநாயகனாக ப்ரமோஷன் ஆகி கதாநாயகனாக மாறினார். முதலில் சில படங்கள் ஹிட் ஆகினாலும் பின்னர் பல சறுக்கல்களை சந்தித்தார். அதையடுத்து இப்போதுதான் அவரின் சில படங்கள் ஹிட் ஆக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இப்போது முதன் முறையாக சந்தானம் அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கொண்ட கதையில் நடிக்க உள்ளாராம். மேலும் அப்பா மகன் என்ற இரு கதாபாத்திரத்திலும் சந்தானமே நடிக்க உள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்