ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கமடைந்து விழுந்தேன்.. சமந்தா சொன்ன ஷாக்கிங் தகவல்!

vinoth

திங்கள், 25 மார்ச் 2024 (14:55 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்போது அவர் பேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கும் சிட்டாடல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது சமந்தா கடுமையான உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தன்னுடைய பாட்காஸ்ட் சேனலில் தெரிவித்துள்ளார்.

அதில் “குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் நான் சிட்டாடல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். அதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருந்ததால் உடல்ரீதியாக அதிக ஆற்றல் தேவைப்பட்டது. அது மிகவும் கடினமானதாக இருந்தது. படப்பிடிப்பில் சில சமயங்களில் மயக்கமடைந்து விழுந்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்