ஓடிடி யில் வெளியாகும் ஹெச் வினோத்தின் படம் – தயாரிப்பாளர் அதிரடி முடிவு!

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:44 IST)
ஹெச் வினோத் கதை, திரைக்கதை வசனத்தில் உருவான சதுரங்கவேட்டை 2 திரைப்படம் இப்போது ஓடிடியில்  வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் சதுரங்க வேட்டை. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்காக கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அவர் எழுதிக் கொடுத்தார்.

அந்த படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாகவும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம், ஆயுத பூஜைக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்தது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிபாளர் மனோ பால முயற்சி செய்து வருகிறார். இதனால் விரைவில் படம் ரிலீஸாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்