ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் மகேஷ்பாபு? இணையத்தில் பரவும் செய்தி உண்மையா?

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:53 IST)
நடிகர்கள் விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் தளபதி விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை விடுத்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் அவர்கள் ஏற்று நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடிகளை நட்டு, இதுகுறித்த குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்நிலையில் இப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாகவும் அந்த படத்தினை முருகதாஸ் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த திரைப்படத்தில் தமிழில் மகேஷ் பாபு வில்லனாகவும், விஜய் தெலுங்கில் வில்லனாகவும் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விசாரித்ததில் இந்த தகவல் உண்மையில்லை என சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஸ்பைடர் படத்தின் போது அப்படி ஒரு ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதனால் ரசிகர்கள் இப்படி ஒரு செய்தியை நம்பிவிட்டனர் என சொல்லப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்