ஷங்கரின் 2.0 படத்தை அர்னால்டு இதனால்தான் நிராகரித்தாரா?

சனி, 22 செப்டம்பர் 2018 (12:49 IST)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில்  2.0 திரைப்படம் தயாராகி வருகிறது.


இந்த படத்தில் ரஜினி காந்த், அக்ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் 500 கோடிக்குமேல் செலவு செய்து தயாரித்துள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் 2.0 படத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டுவிடம் கேட்டார்களாம். அதற்க அர்னால்டு படத்தின் தயாரிப்பு மற்றும் ஷூட்டிங் பணிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். ஆனால் இந்திய சினிமாவில் இந்த பட்ஜெட்டில் சாத்தியம் இல்லை என்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டதாம். அதன் பிறகு  அக்ஷய் குமார் 2.0வில் நடிக்க ஒப்புக்கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்