மாஸ்டர் மாளவிகா… ஈஸ்வரன் நிதி அகர்வால் – இரண்டு பேருக்கும் குரல் கொடுத்த ரவினா!

செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:44 IST)
பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களின் நாயகிகளுக்கும் ரவினா ரவி பின்னணி பேசியுள்ளார்.

டப்பிங் பேசுவது என்பது இந்திய சினிமாவுக்கே உள்ள பிரத்யேகமான அம்சம். அதிலும் தென்னிந்தியாவில் குறிப்பாக நடிகைகளுக்கு டப்பிங் பேசுவதற்கு என்றே டப்பிங் யூனியனில் தனியாக ஆட்கள் உள்ளனர். அந்த வகையில் இப்போது பிசியாக நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருபவர் ரவீனா ரவி. இவர் ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் ராக்கி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனனுக்கும், ஈஸ்வரன் மற்றும் பூமி படங்களின் நாயகி நிதி அகர்வாலுக்கும் அவரே டப்பிங் பேசியுள்ளார். ஏற்கனவே எமி ஜாக்சன் உள்ளிட்ட கதாநாயகிகளுக்கும் இவர் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்