தலையணை உரை திருடியது பற்றி ஓப்பனாக கூறிய ராஷ்மிகா மந்தனா

புதன், 23 செப்டம்பர் 2020 (15:00 IST)
தெலுங்கு சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக பார்க்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சாலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அக்கட தேசத்து ரசிகர்களின் பேவரைட் நடிகையானார்.

அதையடுத்து விஜய் தேவராகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் வளைத்து போட்டது. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கி மின்கி என்ற ஓரே ஒரு பாடல் மொழி தெரியாத ரசிகர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் வலம் வந்தது.

ராஷ்மிகா நேரடியாக இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அங்கிருந்த தலையணை உரை அழகாக இருந்ததால் திருடி வந்ததாக லைவ் சாட்டில் ரசிகர்களிடம் கூறி சிரிப்பை வரவைத்துவிட்டார். இவ்ளோவ் பெரிய நடிகையா இருந்தும் அல்ப வேலையை செஞ்சிருக்கீங்களே ராஷு...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்