ரஜினியின் பிடிவாதம் எதிரொலி: ‘அண்ணாத்த’ படம் டிராப்பா?

செவ்வாய், 28 ஜூலை 2020 (07:25 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது 
 
இந்நிலையில் இந்த படம் தற்போது டிராப் ஆகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் ஆனால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதக கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை டிராப் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
அதேபோல் இயக்குனர் சிவாவும் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக முடிவடையும் வரை படத்தை இயக்க தயாரில்லை என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படம் டிராப் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்ததும் இந்த படம் தொடங்கும் என்றும் அதுவரை நிறுத்தி வைக்கப்படும் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்