ரசிகரின் ஆபாசக் கேள்வி – சூப்பர் பதில் சொன்ன பிரபலத்தின் மகள்!

திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:45 IST)
ராதிகா மகளோடு சரத்குமார்

நடிகை ராதிகாவின் மகளான ரேயான் தனது சமூகவலைதள பக்கத்தில் இட்ட பதிவு  ஒன்றில் அநாகரீகமாக கேள்வி எழுப்பிய நபருக்கு நெத்தியடி பதிலை அளித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே ஏற்கனவே திருமணம் செய்து அதில் மனமுறிவு ஏற்பட்டு பின்னர் வாழ்க்கைத் துணையாக இணைந்தவர்கள். இவர்கள் இருவருக்குமே முந்தைய திருமணத்தில் குழந்தைகள் உள்ளனர். அப்படி ராதிகாவின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்தவர்தான் ரேயான். இந்நிலையில் ரேயான் சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு  அதில் ’உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அப்பா’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் கமெண்ட் இட்ட ரசிகர் ஒருவர் ‘அம்மா ஓகே.. அவரை அப்பானு சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா?’ என்று அநாகரீகமாகக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ரேயான் ‘ ஆமாம். அப்பாதான்…இப்ப என்ன பண்ண போற?’ என நெத்தியடி கேள்வி எழுப்பியுள்ளார். ரேயானின் இந்த பதிலுக்குப் பிறகு அவர் தலைமறைவானார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்